Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப்புக்கொடி ஏற்றி போராட முடிவு

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப்புக்கொடி ஏற்றி போராட முடிவு

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப்புக்கொடி ஏற்றி போராட முடிவு

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னை: கறுப்புக்கொடி ஏற்றி போராட முடிவு

ADDED : ஆக 06, 2024 02:29 AM


Google News
ராசிபுரம்,

ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்றுவதற்கான தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ராசிபுரம் பஸ் ஸ்டாண்டை இடமாற்ற கடந்த மாதம், 5ம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர். இதை ரத்து செய்யக்கோரி ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடையடைப்பு, மனித சங்கிலி, மனு கொடுக்கும் போராட்டம், உண்ணாவிரதம் ஆகிய போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

நாளை கவுன்சிலர்களிடம் வாக்காளர்கள் மனு அளிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்கள் அவர்களது கவுன்சிலர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். மேலும், சுதந்திர தினமான ஆக., 15ல் வீடுதோறும் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us