Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொழிலாளி மர்ம கொலை கொலையாளியை தேடும் போலீஸ்

தொழிலாளி மர்ம கொலை கொலையாளியை தேடும் போலீஸ்

தொழிலாளி மர்ம கொலை கொலையாளியை தேடும் போலீஸ்

தொழிலாளி மர்ம கொலை கொலையாளியை தேடும் போலீஸ்

ADDED : ஆக 05, 2024 09:16 PM


Google News
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, ஆலத்துார்நாடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 42, விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலாவதி, 40. இந்த தம்பதிக்கு, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். குடும்பத்தகராறு காரணமாக, ஆறு மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின், இரு தரப்பினரும் சமாதானம் செய்து, சில நாட்களாக சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு, ரவிச்சந்திரன், வீட்டுக்கு வெளியே திண்ணையில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். மனைவியும், மகளும் வீட்டுக்குள் துாங்கிக் கொண்டிருந்தனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, துாங்கி எழுந்து வெளியே வந்த கலாவதி, கணவர் ரவிச்சந்திரனை எழுப்பினார்.

அவர் எழுந்திருக்காததால், அக்கம் பக்கத்தினரை அழைத்தார். அவர்கள் வந்து பார்த்ததில், ரவிச்சந்திரன் இறந்து கிடப்பது தெரிந்தது.

வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த ரவிச்சந்திரன் கழுத்தில், காயம் இருந்ததால், அவரை கழுத்தை நெரித்து யாரோ கொலை செய்திருக்கலாம் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us