Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் வரும் 22ல் தேர்த்திருவிழா

சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் வரும் 22ல் தேர்த்திருவிழா

சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் வரும் 22ல் தேர்த்திருவிழா

சவுரிபாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் வரும் 22ல் தேர்த்திருவிழா

ADDED : ஜூலை 20, 2024 02:45 AM


Google News
ராசிபுரம்:சேலம் மறை மாவட்டத்துக்குட்பட்ட, மதியம்பட்டி சவுரிபாளையத்தில், புனித மரிய மதலேனாள் ஆலயம் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும், தேர்த்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும், மாலை, 6:30 மணிக்கு, நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம், சங்ககிரி பங்கு தந்தை கிருபாகரன் தலைமையிலும், நேற்று, திருச்செங்கோடு பங்கு தந்தை எட்வர்டு ததேயுஸ் தலைமையிலும், நவநாள் திருப்பலி நடந்தது.இன்று மாலை, 6:30 மணிக்கு, பட்லுார் அருட்பணி விக்டர் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. நாளை காலை, 8:30 மணிக்கு, திருப்பலி, மதியம், 3:00 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை, 6:30 மணிக்கு, ஆசீர்வாத திருப்பலி, இரவு, 11:00 மணிக்கு வேண்டுதல் தேர் நடக்கிறது.வரும், 22 காலை, 5:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட புதிய குருக்கள் தலைமையில் திருப்பலியும், 7:15 மணிக்கு, சிலுவைப்பாதை நிலைகள் மந்திரிப்பு, 7:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில், திருவிழா திருப்பலி நடக்கிறது.மாலை, 5:30 மணிக்கு, சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில், குணமளிக்கும் திருப்பலியும், நள்ளிரவு, 12:00 மணிக்கு, புனிதையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் எழுந்தருள் புனிதர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்குகிறார். 23 காலை, 7:00 மணிக்கு, நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை, பங்கு தந்தை கிளமெண்ட் ராஜ், பங்கு மக்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us