/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்கள் பங்கேற்க அழைப்பு: கலெக்டர் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்கள் பங்கேற்க அழைப்பு: கலெக்டர்
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்கள் பங்கேற்க அழைப்பு: கலெக்டர்
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்கள் பங்கேற்க அழைப்பு: கலெக்டர்
நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நாடுனர்கள் பங்கேற்க அழைப்பு: கலெக்டர்
ADDED : ஜூலை 18, 2024 01:11 AM
நாமக்கல்: 'நாளை (ஜூலை, 19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தனியார்துறை நிறுவனங்களும்,- தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும், 'தனியார்-துறை வேலைவாய்ப்பு முகாம்' நாமக்கல் மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்-தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கிறது. இம்மாதத்திற்-கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாளை (ஜூலை, 19) காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவ-னங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகி-களை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்-ளலாம்.
இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். அதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
வேலையளிப்போரும், வேலைநாடுனர்களும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு, 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.