Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல்லில் இன்று கூட்டுறவு பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

நாமக்கல்லில் இன்று கூட்டுறவு பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

நாமக்கல்லில் இன்று கூட்டுறவு பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

நாமக்கல்லில் இன்று கூட்டுறவு பணியாளர் குறைதீர் நாள் கூட்டம்

ADDED : ஜூலை 12, 2024 01:07 AM


Google News
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மண்டலத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, இரண்டாவது வெள்ளிக்கிழமை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறை தீர்க்கும், பணியாளர் நாள்கூட்டம் நடத்தப்படுகிறது.

இதையொட்டி இன்று, (12ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மண்டல கூட்டுறவு இணைப்

பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை http:/rcs.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவிட இயலாதவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின்போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, இரு மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின், இன்று நடைபெறும் பணியாளர் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us