/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வரத்து அதிகரிப்பால் அரளி பூ விலை சரிவு வரத்து அதிகரிப்பால் அரளி பூ விலை சரிவு
வரத்து அதிகரிப்பால் அரளி பூ விலை சரிவு
வரத்து அதிகரிப்பால் அரளி பூ விலை சரிவு
வரத்து அதிகரிப்பால் அரளி பூ விலை சரிவு
ADDED : ஜூன் 15, 2024 07:18 AM
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் யூனியனில் காரவள்ளி, நெடுங்கோம்பை, ராமநாதபுரம்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் அரளி பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பூக்களை தினமும் பறித்து, நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு ஏலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
கடந்த மாதம், கடும் வெயிலால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பூக்கள் வரத்து குறைந்திருந்தது. இதனால், கிலோ அரளி, 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது, நல்ல மழை பெய்து வருவதால், அரளி பூ வரத்து அதிகரித்துள்ளது. இதனால், நேற்று, நாமக்கல்லில் நடந்த பூ மார்க்கெட் ஏலத்தில், ஒரு கிலோ அரளி, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.