Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'வல்வில் ஓரி'க்கு சிறப்பு வழிபாடு

'வல்வில் ஓரி'க்கு சிறப்பு வழிபாடு

'வல்வில் ஓரி'க்கு சிறப்பு வழிபாடு

'வல்வில் ஓரி'க்கு சிறப்பு வழிபாடு

ADDED : ஆக 04, 2024 03:37 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அறம் வளர்த்த நாயகி தர்-மசம்வர்த்தினி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.

இக்-கோவில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் கட்டப்பட்டது. இதனால், கோவில் வளாகத்தில் வல்வில் ஓரிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் வல்வில் ஓரி மேம்பாட்டுக்-குழு சார்பில், ஆடிப்பெருக்கு தினத்தில் கைலாசநாதர் கோவிலில் உள்ள வல்வில் ஓரிக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். 25ம் ஆண்டாக, நேற்று மேம்பாட்டுக்குழு தலைவர் மோகன்ராஜ் தலைமையில் சிறப்பு பூஜை நடந்நதது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் பா.ம.க., நிர்வாகிகள் பொன்னுசாமி, பாலு, வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us