/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வரும் 21ல் இடைநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டத்தில் 501 தேர்வர்கள் பங்கேற்பு வரும் 21ல் இடைநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டத்தில் 501 தேர்வர்கள் பங்கேற்பு
வரும் 21ல் இடைநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டத்தில் 501 தேர்வர்கள் பங்கேற்பு
வரும் 21ல் இடைநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டத்தில் 501 தேர்வர்கள் பங்கேற்பு
வரும் 21ல் இடைநிலை ஆசிரியர் தேர்வு மாவட்டத்தில் 501 தேர்வர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 14, 2024 03:30 AM
நாமக்கல்: 'வரும், 21ல் நடக்கும் இடைநிலை ஆசிரியர் தேர்வில், 501 பேர் கலந்து கொள்கின்றனர்' என, கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடக்க உள்ள இடைநிலை ஆசிரியர் தேர்வு முன்னேற்-பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., ராஜேஷ்-கண்ணன் முன்னிலை வகித்தார்.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் தேர்வு, வரும், 21ல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்-தேர்விற்கு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர் தேர்வை, 501 தேர்வர்கள் எழுதுகின்-றனர். தேர்வர்கள் தேர்வெழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்-பட்டுள்ளன. தேர்வு நாளன்று, தேர்வகள் மையத்திற்கு, காலை, 8:30 முதல், 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பின், தேர்வர்கள் மையத்திற்குள் அனும-திக்கப்படமாட்டார்கள். அதனால், தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்-துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, தேர்வர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்வை சிறப்பான முறையில் நடத்த அனைத்து துறை அலுவ-லர்களும் தங்களுக்கான பணிகளை சரியான முறையில் மேற்-கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்டபட துறை அலுவலர்கள் பங்-கேற்றனர்.