Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாய்கள் கடித்து 4 ஆடு பலி

நாய்கள் கடித்து 4 ஆடு பலி

நாய்கள் கடித்து 4 ஆடு பலி

நாய்கள் கடித்து 4 ஆடு பலி

ADDED : ஆக 06, 2024 01:56 AM


Google News
சேந்தமங்கலம்,சேந்தமங்கலம் அருகே, தாண்டாகவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 57. இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச்சென்று, மாலையில் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைப்பது வழக்கம். இதேபோல், நேற்று முன்தினம் இரவு, மாரிமுத்து ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின், தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து வைத்தார். அப்போது, அங்கு வந்த தெருநாய்கள், நான்கு ஆடுகளை கடித்து குதறின. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வந்த மாரிமுத்து, ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இப்பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன், 10க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறின. தற்போது, மீண்டும் தெருநாய்கள், ஆடுகளை கடித்த சம்பவம் அங்குள்ள விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us