Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அறிவியல் கண்காட்சி150 மாணவியர் பங்கேற்பு

அறிவியல் கண்காட்சி150 மாணவியர் பங்கேற்பு

அறிவியல் கண்காட்சி150 மாணவியர் பங்கேற்பு

அறிவியல் கண்காட்சி150 மாணவியர் பங்கேற்பு

ADDED : மார் 20, 2025 01:40 AM


Google News
அறிவியல் கண்காட்சி150 மாணவியர் பங்கேற்பு

நாமக்கல்:நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், நேற்று நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 150 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவியர், 150 படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

அவற்றில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல், ஐ.சி.யு., வார்டில் உள்ளவரின் நிலையை அறியும் கருவி, இயற்கை உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் படைப்புகள் இருந்தன. இந்த அறிவியல் கண்காட்சியை, பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். அவற்றில், சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு, 3,000, இரண்டாம் பரிசு, 2,000, மூன்றாம் பரிசு, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us