Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் அருகே ஒரே இடத்தில் 15 நாய் சாவு

ராசிபுரம் அருகே ஒரே இடத்தில் 15 நாய் சாவு

ராசிபுரம் அருகே ஒரே இடத்தில் 15 நாய் சாவு

ராசிபுரம் அருகே ஒரே இடத்தில் 15 நாய் சாவு

ADDED : ஜூலை 12, 2024 01:01 AM


Google News
ராசிபுரம், ராசிபுரம் அருகே ஒரே இடத்தில், 15 நாய்கள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், குருக்கபுரம் ஊராட்சி கொழிஞ்சிப்பட்டி கிராமத்தில் உள்ள மயானம் அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் பெண் தொழிலாளர்கள் குட்டை அமைத்து வருகின்றனர். நேற்று இப்பகுதிக்கு வந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மயானம் பகுதியில் ஆங்காங்கே, 15 நாய்கள் இறந்து கிடந்தன. உடல்களில் ஈ மொய்த்திருந்தது. உடல்களில் இருந்து துர்நாற்றமும் வீசத்தொடங்கியது.

நேற்று முன்தினம் இப்பகுதியில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும்போது, நாய்கள் எதுவும் இறக்கவில்லை. வேறு எங்காவது நாய்களை கொன்று, இங்கே வந்து வீசி சென்றார்களா அல்லது நாய்களுக்கு மருந்து வைத்து அவைகள் இங்கே வந்து இறந்தனவா என்று தெரியவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us