Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 15 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள் ஏலம்: ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

15 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள் ஏலம்: ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

15 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள் ஏலம்: ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

15 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள் ஏலம்: ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

ADDED : ஜன 08, 2025 03:08 AM


Google News
15 நாட்களுக்கு பின் நடந்த மஞ்சள்

ஏலம்: ரூ.24 லட்சத்துக்கு விற்பனை

நாமகிரிப்பேட்டை,

நாமகிரிப்பேட்டை பகுதி யில் ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. தற்போது, சீசன் முடியும் நிலையில் உள்ளதால், மஞ்சள் வரத்து குறைந்து வருகிறது. 15 நாட்களுக்கு பின், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. நேற்று, 358 மூட்டை மஞ்சள் மட்டுமே ஏலத்திற்கு வரத்தாகின. விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 5,069 ரூபாய்; அதிகபட்சம், 14,339 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 6,009 ரூபாய்; அதிகபட்சம், 11,002 ரூபாய்; பனங்காலி ரகம் குறைந்தபட்சம், 5,069 ரூபாய்; அதிகபட்சம், 17,503 ரூபாய்க்கு விற்பனையாகின. விரலி, 230 மூட்டை, உருண்டை, 120 மூட்டை, பனங்காலி, 8 மூட்டை என, 358 மூட்டை மஞ்சள், 24 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us