/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு
பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு
பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு
பால் சொசைட்டியில் 10 அடி நீள பாம்பு மீட்பு
ADDED : ஜூலை 03, 2024 07:43 AM
குமாரபாளையம் : குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளது. ஆள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த அலுவலகத்தில், நேற்று மாலை, 2:00 மணியளவில், 10 அடி நீள பாம்பு ஒன்று புகுந்தது.
இதையறிந்த அலுவலக பணியாளர்கள்
அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தொடர்ந்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து வந்து, பாம்பை லாவகமாக பிடித்து காட்டுப்பகு-தியில் விட்டனர். இதனால் அப்பகுதியில்
பரபரப்பு ஏற்பட்டது.
இந்த அலுவலகம் அருகே, கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் ஓடை உள்ளது. இப்பகுதியில் இருந்து விஷ ஜந்துக்கள் அடிக்கடி உலா வருகின்றன. இதனை தடுக்க, பாதுகாப்பு பணிகள் மேற்-கொள்ள வேண்டும் என, பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.