Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வரும் 10ல் பணியாளர் நாள் நிகழ்ச்சி கூட்டுறவு பணியாளர் பயன்பெறலாம்

வரும் 10ல் பணியாளர் நாள் நிகழ்ச்சி கூட்டுறவு பணியாளர் பயன்பெறலாம்

வரும் 10ல் பணியாளர் நாள் நிகழ்ச்சி கூட்டுறவு பணியாளர் பயன்பெறலாம்

வரும் 10ல் பணியாளர் நாள் நிகழ்ச்சி கூட்டுறவு பணியாளர் பயன்பெறலாம்

ADDED : ஜன 08, 2025 03:09 AM


Google News
நாமக்கல், 'நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வர் ஆணைப்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்யும் வகையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை, மண்டல அளவில், 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி நடத்தப்படும் என, அறிவித்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் மண்டலத்தில், இரு மாதங்களுக்கு ஒரு முறை, இரண்டாவது வெள்ளிக்கிழமை, மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின்

குறைதீர்க்கும், 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.நான்காவது, 'பணியாளர் நாள்' நிகழ்ச்சி, வரும், 10ல், கலெக்டர் அலுவலகத்தில், இரண்டாவது தளத்தில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில், காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டுறவு நிறுவன பணியாளர்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள், தங்கள் குறைகள் தொடர்பான விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம். அந்த விண்ணப்பங்கள் நிகழ்ச்சியின் போதே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 2 மாதங்களுக்குள் தீர்வு செய்யப்படும். நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையில் பணி

புரிந்து வரும் மற்றும் ஓய்வுபெற்ற அனைத்து நிலை பணியாளர்களும், தங்களுக்கு ஏதாவது குறை இருந்தால், 'பணியாளர் நாள்' கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டு

பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us