/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாக்காளர் அட்டையைஒப்படைக்கும் போராட்டம் வாக்காளர் அட்டையைஒப்படைக்கும் போராட்டம்
வாக்காளர் அட்டையைஒப்படைக்கும் போராட்டம்
வாக்காளர் அட்டையைஒப்படைக்கும் போராட்டம்
வாக்காளர் அட்டையைஒப்படைக்கும் போராட்டம்
ADDED : மார் 18, 2025 01:41 AM
வாக்காளர் அட்டையைஒப்படைக்கும் போராட்டம்
எலச்சிபாளையம்:எலச்சிபாளையம் அருகே, இலுப்புலி கிராமம், மாரம்பாளையம் - பெராங்காடு பகுதியில், 12 விவசாய குடும்பங்கள் செல்லும் பொது பாதையில் சிலர் கற்கள், மரங்களை கொட்டி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் திருச்செங்கோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த பிப்., 9ல், வெளியான தீர்ப்பில், பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அனைவரும் செல்லலாம் என தீர்ப்பு வெளியானது. ஆனால், இதுவரை, அதிகாரிகள் இந்த தீர்ப்பை அமல்படுத்த
வில்லை.இந்நிலையில், நேற்று, அப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள் ரவி, தங்கவேல் முன்னிலையில், துணை தாசில்தார் கனகலட்சுமி, ஆர்.ஐ., கண்ணன், வி.ஏ.ஓ., தீபன்ராஜ் ஆகியோரிடம் வாக்காளர் அடையாள அட்டையை
ஒப்படைத்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகி ராமசாமி என, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.