Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டுகோள்

ADDED : ஜூலை 02, 2024 06:54 AM


Google News
வெண்ணந்துார் : வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்-டப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நி-லையில் அங்கு, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. 'மாற்-றுப்பாதையில் செல்லவும்' என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரி-விக்கும் வகையில் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்பட-வில்லை.

இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மண் சறுக்கி விட்டு நிலைதடுமாறி கீழே விழும் சூழ்நிலை ஏற்பட்டு வருகி-றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர பணிக்கு செல்பவர்கள், ஆம்புலன்சில் செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே அங்கு அறிவிப்பு பலகை வைக்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us