/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி 'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி
'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி
'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி
'மக்களுடன் முதல்வர்' முகாம் 82 பேருக்கு ரூ.1 கோடி உதவி
ADDED : மார் 12, 2025 08:09 AM
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், நாரைக்கிணறு, ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம், கவுண்டம்பாளையம் பகுதியில், நேற்று மக்க-ளுடன் முதல்வர் திட்ட, 3ம் கட்ட சிறப்பு முகாம் நடந்தது.
அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி ஆகியோர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்-கொண்டனர். இதில், 82 பயனாளிகளுக்கு, 1.04 கோடி ரூபாயில், அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, அட்மா குழுத்தலைவர்கள் ரவீந்திரன், ஜெகநாதன், டி.ஆர்.ஓ., சுமன், தாசில்தார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* எலச்சிபாளையம் ஒன்றியம், பரமத்திவேலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியமணலி, மாவுரெட்டிப்பட்டி பகுதி-களில், நேற்று மக்களுடன் முதல்வர், 3ம் கட்ட முகாம் நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 70 பயனாளிகளுக்கு, 26.64 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்-கினார். தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, அட்மா குழுத்தலைவர் தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி-வாளர் அருளரசு, பி.டி.ஓ.,க்கள் லோகமணிகண்டன், தனம் உள்-பட பலர் கலந்துகொண்டனர்.