Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம் ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம் ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம் ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானம் ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்

ADDED : ஆக 01, 2024 02:01 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்வதற்கான நகர்மன்ற தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய, நகராட்-சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள் ஒன்றி-ணைந்து, 'ராசிபுரம் பேருந்து நிலைய மீட்டு கூட்டமைப்பை' தொடங்கினர்.

முதல் கட்டமாக கடந்த, 18ல் கடையடைப்பு நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 23ல், உண்ணாவிரத போராட்டம் நடத்-தப்போவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி தர-வில்லை. இதையடுத்து, மக்கள் பேரணியாக சென்று, 'பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்யக்கூடாது' என கோரிக்கை மனு அளித்தனர். மேலும், உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், உண்-ணாவிரத போராட்டத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிட்டதைய-டுத்து, நேற்று காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை புதிய பஸ் ஸ்டாண்ட் எம்.ஜி.ஆர்., சிலை அருகே உண்ணா-விரத போராட்டம் நடத்தினர்.

இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா மற்றும் அ.தி.மு.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., - கம்யூ., - பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், அமைப்-பினர், சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது, 'பஸ் ஸ்டாண்ட் இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us