/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல்லில் யுகாதி பெருவிழாகுறித்து முன்னேற்பாடு கூட்டம் நாமக்கல்லில் யுகாதி பெருவிழாகுறித்து முன்னேற்பாடு கூட்டம்
நாமக்கல்லில் யுகாதி பெருவிழாகுறித்து முன்னேற்பாடு கூட்டம்
நாமக்கல்லில் யுகாதி பெருவிழாகுறித்து முன்னேற்பாடு கூட்டம்
நாமக்கல்லில் யுகாதி பெருவிழாகுறித்து முன்னேற்பாடு கூட்டம்
ADDED : மார் 28, 2025 01:20 AM
நாமக்கல்லில் யுகாதி பெருவிழாகுறித்து முன்னேற்பாடு கூட்டம்
நாமக்கல்:நாமக்கல்லில், யுகாதி பெருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் நடந்தது.நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வேங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசியதாவது:
வரும், 30ம் தேதி நாமக்கல், எஸ்.பி.எஸ்., திருமண மண்டபத்தில் நடக்கும், 27ம் ஆண்டு யுகாதி விழாவில் சங்க நிறுவனர் ஜெயராமுலு நாயுடுவின் நுாற்றாண்டு விழா நடக்கிறது. காலை, 8:30 மணிக்கு திருமண தகவல் மையம் மற்றும் மணமாலை நிகழ்ச்சி, மதியம் 2:00 மணிக்கு சிறுவர், சிறுமிகளுக்கு ஓவியப்போட்டி, 3:00 மணிக்கு மகளிருக்கான கோலப்போட்டி, தொலைபேசியும் குழந்தைகளும்,
கல்வியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, மாறுவேட போட்டி, நடன போட்டி, பரதநாட்டியம் ஆகியவை நடக்கிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதேபோல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு
களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது.இவ்வாறு பேசினார். மாவட்ட செயலாளர் நாராயணன், பொருளாளர் தங்கவேலு, இளைஞர் அணி தலைவர் சக்திவெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


