Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா

ADDED : ஜூலை 03, 2024 07:45 AM


Google News
நாமக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒப்பந்த துாய்மை பணி-யாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ

மனையில், துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 'கிரிஸ்டல்' என்ற தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணிகள், மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு, செவிலியர், மருத்துவர்களுக்கு உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பணி-களை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், துாய்மை பணியாளர்கள், உதவியா-ளர்கள் என, 222 பேர் சுழற்சி முறையில், ஒப்பந்த அடிப்ப-டையில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு, மாத சம்பளமாக, 17,280 ரூபாய் ஒப்பந்தம் செய்-யப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த நிறுவனம், 14,000 ரூபாய் மட்டுமே வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும்.

பெண்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த கூடாது. 8 மணி நேரத்திற்கு பதிலாக, 13 மணி நேரம் வரை பணி செய்து வருவ-தாகவும், அதற்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியு-றுத்தி, 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மருத்துவமனை நிர்-வாகம், அதிகாரிகள், போலீசார்

பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக, நாமக்கல் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில், துாய்மை, பாதுகாப்பு பணிகள் பாதிக்-கப்

பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us