Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ இயற்கை முறையில் மாவு பூச்சியை கட்டுப்படுத்த வேளாண்துறை 'டிப்ஸ்'

இயற்கை முறையில் மாவு பூச்சியை கட்டுப்படுத்த வேளாண்துறை 'டிப்ஸ்'

இயற்கை முறையில் மாவு பூச்சியை கட்டுப்படுத்த வேளாண்துறை 'டிப்ஸ்'

இயற்கை முறையில் மாவு பூச்சியை கட்டுப்படுத்த வேளாண்துறை 'டிப்ஸ்'

ADDED : ஜூலை 07, 2024 07:12 AM


Google News
ராசிபுரம் : எறும்பு, மாவு பூச்சியால் தானியங்கள், பழங்கள் பாதிக்கப்படு-கின்றன. இவைகளை இயற்கை விவசாயம் மூலம் கட்டுப்ப-டுத்த, ராசிபுரம் வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்-ளனர்.

இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரை கிலோ வசம்பை, அம்மியில் விழுதாக அரைத்து, அரை லிட்டர் தண்ணீருடன் தனியாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அரை கிலோ சித்தரத்தை, அம்மியில் விழுதாக அரைத்து இன்னொரு அரை லிட்டர் தண்ணீரில் கலந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின், பயிர்களில் தெளிக்கும் முன், 10 லிட்டர் தண்ணீரில் இரண்டு திரவங்களில் இருந்து தலா, 200 மில்லி என மொத்தம், 400 மில்லி கலந்து, உடனடியாக எறும்புகள் மீதும் அல்லது மாவு பூச்சி என்ற சப்பாத்தி பூச்சியின் மீதும் தெளிக்க வேண்டும். அதிக கசப்பு தன்மையுள்ள வசம்பு மற்றும் அரிப்பு தன்மை ஏற்ப-டுத்தும் சித்தரத்தையும் இணைந்து எறும்புமீது அல்லது மாவு பூச்-சியின் மீது படும்போது அவை எறும்பு, மாவுப்பூச்சி மீது அதிக எரிச்சலை ஏற்படுத்தி முழுதும் அழித்துவிடும். 3 முதல், 4 நாள் இடைவெளியில் இருமுறை செய்வது நல்ல பலன் தரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us