Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ பனை ஓலை பெட்டி பிரியாணி பக்ரீத் பண்டிகையில் தாராளம்

பனை ஓலை பெட்டி பிரியாணி பக்ரீத் பண்டிகையில் தாராளம்

பனை ஓலை பெட்டி பிரியாணி பக்ரீத் பண்டிகையில் தாராளம்

பனை ஓலை பெட்டி பிரியாணி பக்ரீத் பண்டிகையில் தாராளம்

ADDED : ஜூன் 08, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நாகப்பட்டினம்:நாகூரில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, பனை ஓலை பெட்டியில் ஆண்டுதோறும் மட்டன் பிரியாணி வழங்கி வருகிறார் முஸ்லிம் வாலிபர்.

நாகூரை சேர்ந்தவர் மீரா உசேன்,45. காங்., தேசிய சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர். இவர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரம் நபர்களுக்கு, பனை ஓலை பெட்டியில் சூடான பிரியாணியை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடமைக்காகவும், பெயருக்காகவும் ஏழைகளுக்கு பலர் அன்னதானத்தை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வழங்கி வருகின்றனர்.

ஆனால், பாரம்பரிய சுவை மாறாமல் இவர் வழங்கும் மட்டன் பிரியாணியை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மீரா உசேன் கூறுகையில், 'சூடான பிரியாணியை பனை ஓலை பெட்டிக்குள் வைக்கும் போது பனை ஓலையின் வாசனை அதில் சேர்ந்து, கூடுதல் சுவையோடு, ஹாட் பாக்சில் வைக்கப்பட்டதை போல் சுடச்சுட இருக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதோடு, சுற்றுச்சூழல் மற்றும் பசியாறுவோரின் உடல் நலனும் பாதுகாக்கப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us