ADDED : ஆக 02, 2024 01:47 AM
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் திட்டச்சேரியில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்,35; பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர். நேற்று காலை 6:00 மணிக்கு என்.ஐ.ஏ., பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர், முகமது ரபீக் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
காலை 11;00 மணிவரை 5 மணி நேரம் நடந்த சோதனையில், முகமது ரபீக் பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் எனக் கூறி சென்றனர்.