ADDED : ஜூலை 06, 2024 05:32 PM
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த ராமன் என்பவரிடம் இறால் கொள்முதல் செய்ததற்கான தொகை ரூ.1.10 கோடி தராமல் ஏமாற்றிய புகாரின் பேரில் மயிலாடுதுறை குற்றப்பிரிவு போலீசார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் மீது 2023ல் வழக்குப் பதிவுசெய்து தேடி வந்தனர்.
ஜெயச்சந்திரன் சென்னை தியாகராஜ நகரில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை எஸ்பி மீனா உத்தரவின் பேரில் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நள்ளிரவு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கிளைச் சிறையில் அடைத்தனர்.