ADDED : ஜூலை 04, 2025 03:19 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் 'யோகாவும் இயற்கை வாழ்வியலும்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. மாணவி முத்துச்செல்வி வரவேற்றார்.
செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், யோகா ஆசிரியர் பழனிக்குமார், மேலுார் அரசு கல்லுாரி வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் பாலாஜி பேசினர். மாணவர் அன்னாவிமாடன் நன்றி கூறினார்.