ADDED : மே 21, 2025 05:13 AM
மதுரை : மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக தேனீ தினம் நடந்தது.
பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தேனை ஏற்றுமதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து ஷமி தேன் பண்ணை உரிமையாளர் ஜெயக்குமார் விளக்கினார். தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பரமேஸ்வரன் தெரிவித்தார். பேராசிரியை நிர்மலா, இணைப் பேராசிரியர் ஆனந்த், உதவி பேராசிரியர்கள் சரவணன், ஜோதி லட்சுமி கலந்து கொண்டனர்.