Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் மகளிர் மனிதசங்கிலி

மதுரையில் மகளிர் மனிதசங்கிலி

மதுரையில் மகளிர் மனிதசங்கிலி

மதுரையில் மகளிர் மனிதசங்கிலி

ADDED : மார் 17, 2025 06:00 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மனித சங்கிலி இயக்கம் நடந்தது.

இந்த அமைப்பின் சார்பில் மடீட்சியா அரங்கில் மகளிர் தினம் நடந்தது. இதையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட தலைவர் தமிழ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆனந்தவள்ளி, பஞ்சவர்ணம், தேன்மொழி, அனிதா, ராஜேஸ்வரி, விசாலாட்சி, சகாயடெய்சி, சகாய சாந்தி, கலையரசி முன்னிலை வகித்தனர். துணை குழுஅமைப்பாளர் ரம்யா வரவேற்றார்.

கருத்தரங்கில் அரசு அலுவலகங்கள், ஆலைகளில் விசாகா தீர்ப்பன்படி பாலியல் தடுப்பு கமிட்டி ஏற்படுத்த வேண்டும். உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய் கால சிறப்பு அனுமதி விடுப்பு வழங்க வேண்டும். தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விபுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மாநில செயலாளர் ஜெசி துவக்க உரையாற்றினார். 'எழுவாய் பெண்ணே எதையும் வெல்ல' என்ற பொருளில் மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், முன்னாள் மாநில துணைத்தலைவர் ஞானத்தம்பி உட்பட பலர் பேசினர். துணைக்குழு உறுப்பனர் சுஜாதா நன்றி கூறினார். முன்னதாக மேலுார் ரோட்டில் நடந்த மனித சங்கிலியில் ஏராளமான பெண்கள் கைகோர்த்து நின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us