ADDED : செப் 07, 2025 03:45 AM
மேலுார்: கீழையூர், கீழவளவு, தனியாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., சார்பில் 4239 பேருக்கு அமைச்சர் மூர்த்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், தொகுதி பொறுப்பாளர் ஆனந்த், நகராட்சி தலைவர் முகமது யாசின், கொட்டாம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.