Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/தண்ணீர் நிற்காத குளியல் தொட்டி

தண்ணீர் நிற்காத குளியல் தொட்டி

தண்ணீர் நிற்காத குளியல் தொட்டி

தண்ணீர் நிற்காத குளியல் தொட்டி

ADDED : பிப் 02, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தண்டலை ஊராட்சி சிவக்காட்டூரில் 2020ல் ஒன்றிய பொது நிதி ரூ.2.50 லட்சத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. ஆண், பெண் என 2 தனித்தனி தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தநாள் முதல் தண்ணீர் தொட்டி கட்டடத்தின் உட்புறமாக பக்கவாட்டில் கசிய துவங்கியது.

இதனால் தொட்டியில் தண்ணீர் நிற்காமல் வீணானது. பின் டைல்ஸ்களை அகற்றி பராமரிப்பு பணிகள் செய்தனர். இன்று வரை தண்ணீர் வெளியேறி வருவதால் தொட்டியை பயன்படுத்த முடியவில்லை. கட்டடத்தின் பக்கவாட்டு பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. தரமற்ற கட்டுமான பணியால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் குளியல் தொட்டி உள்ளதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us