Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாசன் அழைப்பு

வாசன் அழைப்பு

வாசன் அழைப்பு

வாசன் அழைப்பு

ADDED : ஜூன் 22, 2025 03:47 AM


Google News
மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாடு வளாகத்தில் அமைக்கப்பட்ட அறுபடை வீடுகளின் அருட்காட்சியை நேற்று பார்வையிட்ட த.மா.கா., தலைவர் வாசன் கூறியதாவது:

சங்கம் வளர்த்து தமிழை வளர்த்த இடம் மதுரை. முருகனின் இருபடை வீடுகள் மதுரையில் உள்ளன. அத்தகைய புண்ணிய பூமியில் முருகன் மாநாடு, அருட்காட்சி நடைபெறுவது சிறப்பு. இதில் அரசியல் கிடையாது. ஆன்மிகம் என்பது மனிதனின் வாழ்வியல் நெறிகளை முறைபடுத்துவதற்கு அடித்தளம். தமிழ்பற்று உள்ளவர்கள் முருகனை வணங்க இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாநாடு நல்லவர்கள் மக்கள் பணியாற்றக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த நினைத்தால், அதை தகர்க்கும் சக்தி மாநாட்டுக்கு உள்ளது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us