ADDED : ஜூன் 05, 2025 01:32 AM
மதுரை: மதுரை ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் ஸ்ரீமுருகன் வைகாசி விசாக விழா கமிட்டி சார்பில் 53ம் ஆண்டு விசாக விழா ஜூன் 9ல் பைபாஸ் ரோடு சிருங்கேரி அபிநவ வித்யா தீர்த்த சபா மண்டபத்தில் நடக்க உள்ளது. அன்று காலை 5:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் விழா துவங்குகிறது. காலை 8:30 மணிக்கு ருத்ரஜபம், அபிேஷகம், 9:30 மணிக்கு தாம்பிராஸ் எஸ்.எஸ்.காலனி மீனாட்சி மகளிரணி குழுவினரின் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நடக்கிறது.
10:00 மணிக்கு லட்சார்ச்சனை, 11:30க்கு சதுர்வேத பாராயணம், மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு நெரூர் ஸ்ரீவித்யா நரசிம்ம ஆஸ்ரமம் ஸ்ரீவித்யா சங்கர சுவாமிகள், மதுரை ஸ்ரீசக்ர ராஜேஸ்வரி பீடம் ராமானந்த சரஸ்வதி சுவாமிகளால் பஜனை, பஜனசாகரம் புஸ்தக வெளியீடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4:30 மணிக்கு திருப்புகழ் இசை வழிபாடு, மாலை 6:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கின்றன.
தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், பஞ்சபதி, வள்ளி தேவசேனா கல்யாணம், டோலோத்சவம் ஆஞ்சனேய உற்ஸவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.