/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டை தாக்கி சூறையாடிய 2 பேர் கைது தப்பி ஓடும்போது கால் முறிந்தது மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டை தாக்கி சூறையாடிய 2 பேர் கைது தப்பி ஓடும்போது கால் முறிந்தது
மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டை தாக்கி சூறையாடிய 2 பேர் கைது தப்பி ஓடும்போது கால் முறிந்தது
மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டை தாக்கி சூறையாடிய 2 பேர் கைது தப்பி ஓடும்போது கால் முறிந்தது
மதுரை சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டை தாக்கி சூறையாடிய 2 பேர் கைது தப்பி ஓடும்போது கால் முறிந்தது
ADDED : ஜூன் 16, 2025 04:14 AM

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனை நேற்று முன்தினம் அதிகாலை சூறையாடி ஏட்டு பால்பாண்டியை தாக்கிய 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் போலீசிடமிருந்து தப்ப முயன்ற பிரபாகரனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் அதிகாலை கொலை குற்றவாளி பேரையூர் தாலுகா வெங்கடாசலபுரம் முத்துவேல் மகன் பிரபாகரன் என்ற போராளி பிரபாகரன் 29, நண்பர் அய்யனார் 20, போலீஸ் ஸ்டேஷனிற்கு வந்தனர்.
ஏட்டு பாண்டியிடம் 'என்னை ஏன் அடிக்கடி விசாரிக்க வருகிறீர்கள்' எனக்கேட்டு அவரை தாக்கி ஸ்டேஷன் அறைக்குள் அடைத்துவிட்டு கம்ப்யூட்டர், வாக்கி டாக்கி, அலைபேசியை அடித்து நொறுக்கிவிட்டு தப்பினர்.
டி.எஸ்.பி., சந்திரசேகர்,இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், பீமா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
பிரபாகரன், அய்யனார்விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பிடிக்க முற்பட்டபோது, பாலத்தில் இருந்து பிரபாகரன் குதித்ததால் வலது கை, இடதுகாலில்எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பிரபாகரன் மீது 3 கொலை வழக்கு, ஒரு கற்பழிப்பு வழக்கு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி 2 மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்துள்ளார். லேப் டெக்னீசியனான இவர் வேலையை விட்டுவிட்டு கொலை, கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்தார்.
அய்யனார் மீது 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆணவக்கொலை செய்ததாக வழக்கு உள்ளது.