ADDED : மார் 24, 2025 05:27 AM
மதுரை: மதுரை ஒத்தக்கடை பூங்காவில் யானைமலை கிரீன் பவுண்டேசன் வார விழா அரசு பள்ளி தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆலோசகர் பிரபு வரவேற்றார். குழந்தைகள், பெற்றோர்கள் புங்கை கன்று நட்டனர்.
கன்று, வலையை உறுப்பினர் பாலமுருகன் வழங்கினார். மதுரை ஸ்கூல் ஆப் டிராமா நிறுவனர் உமேஷ், பவுண்டேசன் ஆலோசகர் பாண்டி, உறுப்பினர்கள் பரமேஸ்வரன், பாஸ்கரன், ரமேஷ், ஸ்டெல்லா மேரி பங்கேற்றனர்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர். மாணவி நிலானா நன்றி கூறினார்.