Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சோழவந்தானில் முப்பெரும் விழா

சோழவந்தானில் முப்பெரும் விழா

சோழவந்தானில் முப்பெரும் விழா

சோழவந்தானில் முப்பெரும் விழா

ADDED : செப் 28, 2025 02:51 AM


Google News
சோழவந்தான்: சோழவந்தானில் தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு, பல்வேறு சமூக சேவையை பாராட்டி விருது வழங்குதல், ஆதரவற்றோருக்கு புத்தாடை வழங்குதல், போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நடந்தது. மாநிலத் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் முத்துமணி வரவேற்றார். முரளிகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்துரைத்தார்.

மதுவிலக்குடி.எஸ்.பி., பாஸ்கரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக சப் கலெக்டர் உட்கர்ஷ் குமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பிரசாந்த், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், கருப்பசாமி, மகாலட்சுமி கலந்து கொண்டனர். துணைத் தலைவர் முத்தழகு நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us