Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

போலீசிற்கு 'புகழ்' கிடைத்தது

ADDED : மார் 18, 2025 05:51 AM


Google News
மதுரை: மதுரை நகர் போலீஸ் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடார் ரக நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இதற்கு 'புகழ்' என கமிஷனர் லோகநாதன் பெயர் சூட்டினார்.

ஏற்கனவே இப்பிரிவில் 7 நாய்கள் வெடிகுண்டு கண்டுபிடிப்பு, குற்ற வழக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த 'புகழ்' போதை பொருட்களை கண்டுபிடிக்க பயிற்சி எடுக்க உள்ளது.

நிகழ்ச்சியில் உதவிகமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் தர்மர், எஸ்.ஐ., ராஜேந்திரன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us