/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள் விறு... விறு... குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள் விறு... விறு...
குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள் விறு... விறு...
குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள் விறு... விறு...
குன்றத்தில் கும்பாபிஷேக பணிகள் விறு... விறு...
ADDED : மார் 24, 2025 05:23 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உபகோயிலில் கும்பாபிஷேக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களுக்கான கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் பிப். 10ல் பாலாலயம் நடந்தது. உப கோயில்களான சொக்கநாதர், பழனி ஆண்டவர், பாம்பலம்மன், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி, காசி விசுவநாதர் கோயில்களின் கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணிச் செல்வம், பொம்மதேவன், சண்முகசுந்தரம், ராமையா ஆகியோர் தங்கள் செலவில் செய்து வருகின்றனர்.
உபகோயில்கள் விமானங்களில் மராமத்து பணிகள் முடிந்து வர்ணம் தீட்டப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் மராமத்து பணிகளுக்காக மூங்கில் சாரங்கள் அமைக்கப்படுகிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் திருப்பணிகள் துவங்கும் வகையில் விரைவில் பாலாலயம் நடக்க உள்ளது.