/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள் 50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்
50 அடி ரோடு 30 அடியானது எப்படியோ கவலையில் கரும்பாலை மக்கள்

ரோடு சரியில்லை
பாஸ்கரன்: நல்ல தண்ணீர் குழாய், பாதாள சாக்கடைக்காக தோண்டிய சாலைகளை இன்னும் சரி செய்யவில்லை. ஐம்பதடி ரோட்டை ஆக்கிரமித்து 30 அடியாக்கி விட்டனர். சம்பந்தப்பட்டோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீருக்கு சிக்கல்
மாரியப்பன்: ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வருகிறது. இருப்பினும் சிலர் மின் மோட்டாரை பயன்படுத்தி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் கிடைப்பது சிக்கலாகிறது. தல்லாகுளம் பெருமாள் கோயில், நீச்சல்குளம் பகுதிகளில் 'இரவு நேர' சமூகவிரோதிகள் சிலர் இளைஞர்களை குறி வைத்து செயல்படுகின்றனர். போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
பிரச்னைகளை தீர்க்க முயற்சி
கவுன்சிலர் முருகன் கூறியதாவது: எம்.பி., நிதியில் இருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில் திடல், படிப்பகம் போன்ற உயர்கோபுர மின் விளக்குகள் சமீபத்தில் அமைக்கப்பட்டன. கே.கே.நகர் மெயின் ரோட்டில் கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெரியாறு குடிநீர் திட்டத்தில் அனைத்து தெருக்களுக்கும் குடிநீர் வசதி வழங்கும் பணிகள் நடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் தார்ச்சாலை, முதலியார் கிழக்குத் தெருவில் சிமென்ட் சாலை அமைத்துள்ளோம்.