ADDED : ஜன 10, 2024 06:37 AM
மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் ரங்கராஜன் தலைமையில் அவனியாபுரம் கிளையில் நடந்தது. மாநில மூத்த துணைத் தலைவர் இல.அமுதன் முன்னிலை வகித்தார். கிளை மகளிரணியை சேர்ந்த லதா வரவேற்றார்.
தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு இரங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கொள்கை பரப்புச் செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் நாராயணன், இளைஞரணி செயலாளர் மீனாட்சிசுந்தரம், ஆலோசகர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


