Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

திருப்பரங்குன்றத்தில் 'சூர சம்ஹார லீலை'

ADDED : மார் 17, 2025 05:21 AM


Google News
Latest Tamil News
திருப்பாங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (மார்ச் 18) நடக்கிறது. அதற்கு முன் நிகழ்ச்சியாக இன்று இரவு 7:45 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

சூரசம்ஹார லீலை


நேற்று மாலை வீதிஉலா நிகழ்ச்சியில் யானை, ஆடு, சிங்கம் உள்பட பல்வேறு தலைகளுடன் மாறி மாறி சூரபத்மன் முன்னே செல்ல குதிரை வாகனத்தில் வீரபாகு தேவரும், திருவிழா நம்பியார் சிவாச்சாரியார் வாள் ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வேலுடன் எட்டு திக்குகளிலும் விரட்டிச் சென்று சூரனை வதம் செய்த நிகழ்ச்சி நடந்தது. சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார புராண கதையை பக்தர்களுக்கு சிவாச்சாரியார் கூறினார். தீபாராதனை முடிந்து சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us