Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாணவர்கள் முற்றுகை

மாணவர்கள் முற்றுகை

மாணவர்கள் முற்றுகை

மாணவர்கள் முற்றுகை

ADDED : ஜன 06, 2024 06:08 AM


Google News
திருமங்கலம்: கள்ளிக்குடி - விருதுநகர் ரயில்வே பாதையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குராயூர், மொச்சிகுளம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு செல்லக்கூடிய பாதையில் ரயில்வே நிர்வாகம் அண்டர் பாஸ் பாலம் அமைத்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் ரோடு படுமோசமாகிவிட்டது. வாகனங்கள் செல்ல முடியாத நிலை. இதனால் 3 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள், பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நேற்று வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி மாணவர்கள் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார், விருதுநகர் ரயில்வே போலீசார் சமரசம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us