ADDED : ஜூன் 19, 2025 02:49 AM
திருநகர்: திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை பண்புகளை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சிறந்த, சரியான முடிவுகள் எடுக்கவும், எதிர்காலத்தில் வெற்றிகரமாக திட்டமிடுவதற்காகவும் மாணவர்கள் மாதிரி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. ஓட்டளிப்பு முறையில் பிளஸ் 2 மாணவர் சந்தோஷ் பிரதமராகவும், பிளஸ் 1 மாணவர் லெங்காராம் துணை பிரதமராகவும் வெற்றி பெற்றனர். மாணவர்கள் நித்தீஷ்குமார், விஜய்கண்ணன், அரவிந்த், பாலவிக்னேஷ், கார்த்திகேயன், புகழேஸ்வரன், ஷியாம்தர்ஷன், இர்பான்தான், மாதேஷ் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
தலைமை தேர்தல் அதிகாரியாக தலைமை ஆசிரியர் ஆனந்த் இருந்தார். பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன் வாழ்த்தினர்.