ADDED : ஜூன் 06, 2025 02:46 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டம், கல்லுாரி கனவு திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., அன்பழகன், முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, கல்வி அலுவலர் இந்திரா, அரசு ஐ.டி.ஐ., தொழிற் பயிற்சி நிறுவன முதல்வர், வங்கி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மனு கொடுத்தனர். வங்கிக் கடன்கள், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையில் உள்ள பிரச்னைகள், அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.