
மேலுார்: மதுரையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் 9 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் மேலுார், அ.செட்டியார்பட்டி துவக்கப்பள்ளி 5 ம் வகுப்பு மாணவர் குருபாண்டியன் 4.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வென்றார்.
அவரை தலைமையாசிரியை மணிமேகலை, பயிற்சியாளர் செந்தில்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.