Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

குன்றத்து கோயிலில் மே 31ல் வசந்த உற்ஸவம் துவக்கம்

ADDED : மே 18, 2025 03:04 AM


Google News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவம் மே 31ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது.

அன்று உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்படும். இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடைபெறும். இந்நிகழ்ச்சி ஜூன் 8 வரை நடக்கும்.

விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு ஜூன் 9 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர்.

பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். ஜூன் 10 காலையில் உற்ஸவர் சுவாமி, தெய்வானை தங்கக்குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்திலுள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர்.

அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us