ADDED : ஜூன் 01, 2025 03:53 AM
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ராயபுரம் ஜெர்மேன் நகரில் சாக்கடை சுத்தம் செய்யப்படாமல், கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கிடந்தது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டதோடு தொற்று நோய் அபாயம் குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
பி.டி.ஓ., கிருஷ்ணவேணி உத்தரவுபடி சாக்கடை அகலப்படுத்தப்பட்டு புதர்கள் அகற்றப்பட்டன.