/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது

கூட்டாளியும் கைது
மூவேந்திரன் நடிப்பது போல் திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி தப்ப முயன்றார். எஸ்.ஐ., மாரிகண்ணன் பிடிக்க முயன்றபோது இடது கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது பாதுகாப்பு கருதி சுட்டதில் மூவேந்தரனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார். இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளி சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.
ஒரு நாள் நட்பு
மார்ச் 18 ம் தேதி மதுரை வந்த மலையரசன், பீபிகுளத்தில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு அவ்வழியே வந்த வில்லாபுரம் மூவேந்திரனின் காஸ் ஆட்டோவில் சவாரி சென்றார். மூவேந்திரனின் நண்பர் சிவாவும் 25, உடன் இருந்தார். ஏற்கனவே போதையில் இருந்த மலையரசன், தனது மனைவி இறப்பு, மருத்துவ ஆவணம் வாங்க வந்தது குறித்து நட்புடன் கூறினார். இந்த திடீர் நட்பை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மூவேந்திரனும், சிவாவும் ஆறுதல் கூறுவது போல பேசி 'இன்னொரு கட்டிங் போடலாமா' எனக்கேட்க, 'நான்தான் வாங்கித்தருவேன்' என மலையரசன் கூறியிருக்கிறார். 'உங்களிடம் பணம் இருக்கிற மாதிரி தெரியலையேண்ணே' என மூவேந்திரன் கேட்க, 'அண்ணனிடம் இல்லாத பணமா. எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்' என போதையில் கூறினார். இதற்கிடையே வழியில் சிவா இறங்கிக்கொண்டார்.
ஆன்லைன் விளையாட்டு
ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த மூவேந்திரனுக்கு பணம் தேவைப்பட்டது. பேச்சு கொடுத்து மலையரசனின் ஜிபேயின் ரகசிய எண்ணை தெரிந்துக்கொண்டார். 'ஆயிரக்கணக்கில் பணம் கேட்டால் மலையரசன் தரமாட்டார். அவரை எரித்துக்கொன்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்' என திட்டமிட்டு ரிங் ரோடு மண்டேலா நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டார்.