Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சிவனடியாரை தேடி சிவனே வந்தார் மாங்கொட்டை திருவிழா துவக்கம்

சிவனடியாரை தேடி சிவனே வந்தார் மாங்கொட்டை திருவிழா துவக்கம்

சிவனடியாரை தேடி சிவனே வந்தார் மாங்கொட்டை திருவிழா துவக்கம்

சிவனடியாரை தேடி சிவனே வந்தார் மாங்கொட்டை திருவிழா துவக்கம்

ADDED : மே 31, 2025 05:03 AM


Google News
மேலுார்: மேலுாரில் நடக்கும் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழாவிற்கு திருவாதவூரிலிருந்து திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் எழுந்தருளும் திருவிழா நேற்று வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.

இன்று (மே 31) கொடியேற்றம் நடைபெறும். ஜூன் 1 முதல் 3 வரை சுவாமி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்ச்சியாக பஞ்ச மூர்த்திகளுடன் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் ஜூன் 4 மேலுாருக்கு எழுந்தருளுகிறார். இத்திருவிழா மாங்கொட்டை திருவிழா என்று அழைக்கப்படுகிறது. ஜூன் 7 திருக்கல்யாணமும், ஜூன் 8 தேரோட்டமும் நடைபெறும். ஜூன் 9 கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். ஏற்பாடுகளை இணைகமிஷனர் கிருஷ்ணன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.

பின்னணி என்ன


ஆங்கிலேயர் காலத்தில் மேலுாரில் ஒரு சிவனடியார் இருந்தார். தினமும் 8 கி.மீ., திருவாதவூருக்கு நடந்துச் சென்று சிவனை தரிசிப்பார். அவரது சீடராக தாசில்தார் இருந்தார். சிவனடியாருக்கு வயதானதால் திருவாதவூர் செல்ல முடியவில்லை. அதனால் தாசில்தார் மேலுாரில் சிவலிங்கம் அமைத்துக் கொடுத்தும் திருவாதவூருக்கு செல்ல முடியாதது சிவனடியாருக்கு கவலையாக இருந்தது. அப்போது சிவனடியார் கனவில் தோன்றி நீ இருக்கும் இடத்திற்கு நானே வருவேன் என சுவாமி கூறியுள்ளார். அதன் பேரில் திருவாதவூரிலிருந்து சுவாமிகள் மேலுாருக்கு எழுந்தருளுகிறார். அதனால் தான் இன்றும் மேலுார் நுழைவாயில் முதல் மண்டகப்படியில் தாசில்தாருக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us