ADDED : ஜூன் 08, 2025 04:17 AM
மேலுார்,: ஆமூர் பிரபாகரன் 45, வழக்கறிஞர்.
நயித்தான்பட்டி ரோட்டில் வேகத்தடை அருகே கீழே கிடந்த பர்சை மேலுார் எஸ்.ஐ., ஆனந்தஜோதி, போலீஸ்காரர் கண்ணனிடம் ஒப்படைத்தார். அதில் ரூ.34 ஆயிரம் இருந்தது. விசாரணையில் இலங்கிபட்டி கமலம் 49, என்பவருடையது என தெரிந்தது. உரிய அடையாளங்களை கூறி பர்சை பெற்றுக்கொண்டார். வழக்கறிஞரை போலீசார் பாராட்டினர்.