Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ADDED : ஜூன் 02, 2025 01:01 AM


Google News
மாடு வடிவில் வந்த எமன்

கொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பிரவீன் குமார் 24, சொக்கலிங்கபுரத்தில் உறவினரை பார்க்க டூவீலரில் நண்பர் பிரேம் நசீருடன் 27, சென்றார். டூவீலரை பிரவீன் குமார் ஓட்டினார் ஹெல்மெட் அணியவில்லை. சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் அருகே மாடு குறுக்கே வரவே நிலை தடுமாறி விழுந்தனர். இதில் பிரவீன் குமார் இறந்தார். பிரேம் நசீர் லேசான காயத்துடன் தப்பினார். எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.

குழந்தை பலி

கொட்டாம்பட்டி: பெரியகற்பூரம்பட்டி ராஜா, சீதாலட்சுமி தம்பதிகளுக்கு 4 குழந்தைகள். கடைசி குழந்தை தீரன் 1, காய்ச்சல் பாதிப்பால் நாட்டு மருந்து கொடுத்துள்ளனர். காய்ச்சல் அதிகரிக்கவே மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us