Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : மே 20, 2025 01:09 AM


Google News

கணவர் கண் முன் மனைவி பலி


திருமங்கலம்: நக்கலக்கோட்டை மைக் செட் உரிமையாளர் கருப்பசாமி 60. இவரது மனைவி ஆனந்தி 52. நேற்று காலை திருமங்கலத்தில் நடந்த திருமணத்திற்கு டூவீலரில் வந்துவிட்டு திரும்பிச் சென்றனர். உசிலம்பட்டி ரோட்டில் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே, பின்னால் சென்ற லாரி மோதியதில்ஆனந்தி பலியானார். கருப்பசாமி காயமடைந்தார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரயில் மோதி ஒருவர் பலி


திருமங்கலம்: இப்பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் திருமுருகன் 20. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பாண்டியன் நகர் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது துாத்துக்குடி - சென்னை சரக்கு ரயில் மோதியதில் பலியானார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us